பட்டா -டிப்பர் மோதல்- ஸ்தலத்தில் இருவர் பலி!

301 0

திருகோணமலை கல்மெட்டியாவ 98 ஆம்கட்டை சந்தியில் பட்டா சிறிய லொறியொன்றும்,டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பட்டா லெறியில் பயணித்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு,மூவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று(30) இடம்பெற்றுள்ளது.

கந்தானை பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தானை பகுதியிலிருந்து திருகோணமலை பகுதிக்கு சென்ற சிறிய ரக பட்டா லெறியும் திருகோணமலையிலிருந்து கந்தளாய் பகுதிக்குச் சென்ற டிப்பர் வாகனமுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்குள்ளானோர் வியாபார நோக்கத்துக்காக திருகோணமலைக்குச் செல்லும் போதே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதிக வேகமே விபத்துக்கு காரணமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டிப்பர் வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதோடு விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.