முறையான விசா அனுமதி இல்லாத வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்படுவர்-வஜிர

259 0

முறையான விசா அனுமதிப்பத்திரமின்றி நாட்டில் தொழில் புரியும் வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு தெரிவித்துள்ளார். 

முறையான விசா அனுமதி பத்திரம் இன்றி மத பாடசாலைகளிலும் சில நிறுவனங்களிலும் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் வஜிர அபேவர்த்தன, முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எச்.எம்.ஹலிம் ஆகியோருடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.