விமான நிலைய பாதுகாப்பு கருதி மாற்று வீதியை பயன்படுத்துமாறு கோரிக்கை!

368 0

கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு விவகாரங்களைக் கருத்திற்கொண்டு அதற்கு அண்மித்த வீதியைப் பயன்படுத்துவோர் மாற்றுவீதிகளைப் பயன்படுத்துமாறு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, விமான நிலையத்திற்கு அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பிரிவு முன்னெடுத்துள்ள அதிக சோதனைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி கருத்திற்கொண்டே மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மினுவங்கொடையிலிருந்து கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிப்பதற்காக வருகைதரும் வாகனங்கள், மினுவங்கொடை – ஜா எல வீதியைப் பயன்படுத்துவதுடன் அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிப்பதற்கு ஜா எல உள்நுழைவைப் பயன்படுத்த முடியும்.

அதேபோன்று கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தி மினுவங்கொடை, குருணாகலை ஆகிய பிரதேசங்களுக்கு செல்வதற்கான தேவையிருப்பின், அதற்குப் பதிலாக ஜா எல அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தி ஜா எல மினுவங்கொடை வீதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மினுவங்கொடையிலிருந்து நீர்கொழும்பு மற்றும் கட்டுநாயக்கவை அண்மித்த பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்வோர், அப்பகுதிகளிலிருந்து மினுவங்கொடைக்குத் திரும்புவோர் தம்மதல் இயன்றளவிற்கு விமானநிலையத்திற்கு அண்மித்த கட்டுநாயக்க – மினுவங்கொடை வீதியைத் தவிர்த்து மாற்றுவீதிகளைப் பயன்படுத்துமாறு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.