வவுனியாவில் இன்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் வாள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று செவ்வாக்கிழமை மதியம் 12.30 மணியளவில் வவுனியா பட்டானிசூர் பகுதியில் நெளுக்குள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஐ.கிப்ஸ்சிறி திஸாநாயக்க தலைமையில் லலித் மற்றும் ஜானக ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் வீட்டுக்கு முன்னால் காணப்படும் கால்வாயினுள் குழாய்க்குள் அடைக்கப்பட்ட நிலையில் இரண்டு வாள்கள் கண்டெடுக்கப்பட்டதனால் சந்தேகத்தின் பேரில் பட்டானிசூர் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சந்தேகநபர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த நபர் மீன் வியாபாரம் செய்பவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.