சஹ்ரான் உரையாற்றிய இறுவட்டுக்களுடன் ஒருவர் கைது

277 0

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயங்கரவாதியான சஹ்ரான் உரையாற்றிய பதினாறு இறுவட்டுக்களை தம் வசம் வைத்திருந்த ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கந்தளாய் பிரதேசத்தில் நேற்று முழுவதும் கந்தளாய் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையிலே பதினாறு இறுவட்டுகளுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேக நபர் காத்தான்குடி பகுதியை பூர்வீகமாக கொண்டதோடு, கந்தளாய் பகுதியில் தொழில் செய்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் படையினரால் மேற்கொண்ட சோதனையின் போதே  சஹ்ரான் உரையாற்றிய 16 இறுவட்டுக்களை  வைத்திருந்த நிலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேக நபரை கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதோடு, தேசிய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.