யாழில் ஐந்து முஸ்லீம்கள் கைது !

250 0

யாழ்.தீவக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஐந்து முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நயினாதீவில்  கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது , முஸ்லீம் மதத்துடன் தொடர்புடைய இறுவெட்டுகளை (CD) வைத்திருந்தமை ,மதம் சார்ந்த புத்தகங்கள் மற்றும் அரபு மொழி புத்தகங்கள் என்பவற்றை வைத்திருந்த குற்றசாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை வேலணை மண்கும்பான் பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரும் முஸ்லீம் மதத்தை சார்ந்தவராவர். 

கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் ஊர்காவற்துறை பொலிசார் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.