பதுளையில் விபத்துக்குள்ளான அம்பியூலன்ஸ்!

256 0

அம்பியூலன்ஸ் வாகனமொன்று பிரதான பாதையை விட்டு மண் மோடொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியதில் சாரதியும், உதவியாளரும் படுகாயங்களுக்குள்ளாகி பதுளை அரசினர் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பதுளை – பசறை பிரதான வீதியில் வேவெஸ்ஸ என்ற இடத்தில் நேற்று மாலை 6 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுளை அரசினர் வைத்தியசாலைக்கு சொந்தமான குறித்த அம்பியூலன்ஸ் வாகனம் பசறைக்கு சென்று, பதுளைக்கு  திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெறும்போது அம்பியூலன்ஸ்  வாகனத்தில் நோயாளர்கள் எவரும் இருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இந்நலைியல் பதுளைப் பொலிஸார் குறித்த விபத்து தொடர்பில்  தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.