வவுனியா வீரபுரம் பகுதியில் டெட்டனேட்டர்கள் மீட்பு

286 0

வவுனியா வீரபுரம் பகுதியில் 24 டெட்டனேட்டர்  குச்சிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மீட்கப்பட்டதாக செட்டிகுளம் பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர். 

வீரபுரம் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் வீதிக்கரையில் உள்ள பற்றை ஒன்றில் மறைத்துவைக்கபட்டிருந்த நிலையில் காணப்பட்ட 24 டெட்டனேட்டர்  குச்சிகளையும், அதனுடன் இணைந்த வயர்களையும் மீட்டுள்ளனர். 

அத்துடன், கொழும்பு மற்றும் மட்டகளப்பு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து செட்டிகுளத்திற்குட்பட்ட பல பகுதிகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கமைய வீரபுரம் பகுதியிலும் இராணுவத்தினரால் சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டு பேருந்துகள், ஏனைய வாகனங்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் முழுமையான சோதனை செய்யபட்ட பின்னரே பயணிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.