உயர் பொறுப்புகளில் அதிரடி மாற்றம்!

262 0

புதிய பிரதம நீதியரசர், பிரதி சட்டமா அதிபர், புதிய கணக்காய்வாளர் நாயகம் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

அதன்படி பிரதி பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவும், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனும், புதிய பிரதம நீதியரசராக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவும், டபுள டி லிவேரா பிரதி சட்டமா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் புதிய கணக்காய்வாளர் நாயகமாக சூலந்த விக்ரமரட்ணவும், நியமிக்கப்பட்டிருக்கின்றார். 

இதேவேளை இவர்கள் அனைவருக்குமான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசனே இன்றைய தினம் வழங்கி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.