இலங்கை அர­சாங்­கத்­தினால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அகதி அந்­தஸ்து வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை!

291 0

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நாட்டில் தொடர்­குண்டுத் தாக்­கு­தல்­களை அடுத்து பா­கிஸ்தான்,ஆப்­கா­னிஸ்தான் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து அக­தி­க­ளாக வரு­கை­தந்து இலங்­கையில் தங்­கி­யி­ருந்த கிறிஸ்­தவ அக­திகள், அவர்கள் தங்­கி­யி­ருந்த இடங்­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.

 அவர்கள் தங்­கு­வ­தற்கு தற்­போ­து­வரை அர­சாங்­கத்­தினால் இட­மொன்று ஒதுக்­கப்­ப­ட­வில்லை  என்று  அருட்­தந்தை சக்­திவேல்  தெரி­வித்தார். 

அருட்­தந்தை சக்­திவேல் இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் கூறு­கையில், 

பாகிஸ்தான் மற்றும் ஆப்­கா­னிஸ்தான் ஆகிய நாடு­களில் கத்­தோ­லிக்க சமூ­கத்­தினர் எதிர்­கொள்ள நேர்ந்த பிரச்சி­னை­களைத் தொடர்ந்து சுமார் 8 வரு­டங்­க­ளுக்கு முன்னர் அவ்­விரு நாடு­களைச் சேர்ந்த சுமார் 500 கத்­தோ­லிக்கக் குடும்­பங்கள் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் தாப­னத்தில் தம்மை அக­தி­க­ளாகப் பதி­வு­செய்து இலங்­கைக்கு வருகை தந்­தனர். எனினும் இலங்கை அர­சாங்­கத்­தினால் அவர்­க­ளுக்கு இன்­னமும் அகதி அந்­தஸ்து வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

அக­தி­க­ளாக இலங்­கைக்கு வரு­கை­தந்த அவர்கள் வெவ்­வேறு பிர­தே­சங்­களில் தங்­கி­யி­ருந்­த­துடன், அவர்­களில் பெரு­ம­ள­வானோர் கத்­தோ­லிக்­கர்கள் செறிந்து வாழும் நீர்­கொ­ழும்பு பிர­தே­சத்தில் இது­வரை காலமும் வாழ்ந்­து­வந்­தனர்.   அண்­மையில் நாட்டில் இடம்­பெற்ற தொடர்­குண்டுத் தாக்­கு­தல்­களை அடுத்து அவர்கள் நீர்­கொ­ழும்புப் பிர­தே­ச­வா­சி­களால் தங்­கி­யி­ருந்த வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். 

அத­னைத்­தொ­டர்ந்து அவ்­வாறு வெளி­யேற்­றப்­பட்­ட­வர்­களில் சுமார் 600 பேர் பஸ்­யாலை பிர­தே­சத்­திற்கும், சுமார் 90 பேர் அத்­து­ரு­கி­ரிய பிர­தே­சத்­திற்கும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டனர். 

எனினும் அத்­து­ரு­கி­ரிய பிர­தே­ச­வா­சிகள் அக­தி­களை அனு­ம­திப்­ப­தற்கு மறுத்த நிலையில் மீண்டும் அவர்கள் நீர்­கொ­ழும்­பிற்கு அனுப்­பப்­பட்­டனர். 

தற்­போது பா­கிஸ்தான் மற்றும் ஆப்­கா­னிஸ்தான் நாடு­க­ளி­லி­ருந்து வரு­கை­தந்த கத்­தோ­லிக்க அக­தி­களில் சுமார் 150 பேர் நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்தை அண்­மித்த வாக­னங்கள் நிறுத்­து­மி­டத்தில் தங்­க­வைப்­பட்­டுள்­ளனர். 

இவ்­வாறு அக­தி­க­ளாக நாட்­டிற்கு வருகை தந்­த­வர்கள் தங்­கு­வ­தற்கு இட­மொன்­றையும், பாதுகாப்பையும் அரசாங்கம் வழங்குமாயின், அவர்களுக்குத் தேவையான ஏனைய வசதிகளை ஐக்கிய நாடுகள் தாபனம் வழங்கும். ஆனால் அரசாங்கம் அவர்கள் தொடர்பான எவ்வித தீர்மானங்களையும் இன்னமும் மேற்கொள்ளாமையினால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.