கிளிநொச்சியில் வீடொன்றில் திருட்டு(படங்கள்)

371 0

kilinochchiகிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்குட்பட்ட முரசுமோட்டை பழையகமம் பகுதியில், வயதான கனவன் மனைவி வசித்து வந்த வீட்டுக்குள் இன்று அதிகாலை நுழைந்த திருடர்கள், கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த வீட்டிலிருந்த கணவன், மனைவி ஆகியோரை மிரட்டி உட்கார வைத்து, சல்லடையிட்டு தேடியதுடன் வீட்டிலிருந்த பணம் மற்றும் நகை என்பவற்றை திருடர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இதன்போது, 52 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 பவுண் தங்க நகை என்பன இவ்வாறு கொள்ளைடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில், மூன்று பேர் முகத்தை துணியால் மறைத்துக் கட்டியபடி உள்நுழைந்து மின்குமிழ்கள், தொலைபேசி என்பவற்றை அடித்து நொருக்கியுள்ளனர்.

பின்னர், வீட்டிலிருந்த வயோதிப கணவன், மனைவியை மிரட்டி உட்கார வைத்து, திருடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

kilinochchi-4 kilinochchi-3 kilinochchi-2 kilinochchi-1