அத்துருகிரிய தொழிற்சாலை களஞ்சியசாலையில் வெடிப்பு சம்பவம்

225 0

அத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தில் அமைந்துள்ள இரும்பு உருக்கு நிறுவனம் ஒன்றில் அனல் எண்ணெய் களஞ்சியசாலையில் உள்ள தாங்கி ஒன்று வெடித்துள்ளது. 

நேற்று மாலை 06.00 மணியளவில் இடம்பெற்ற இந்த வெடிப்பு காரணமாக ஊழியர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

வெடிப்பு சம்பவத்தால் ஏற்பட்ட தீப்பரவலை கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததுள்ளனர். 

வெடிப்பு சம்பவத்தால் வேறு பாரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.