நாடு கடத்தப்பட்ட மொஹமட் பைசால் விளக்கமறியலில்

219 0


பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட நாடு கடத்தப்பட்ட மொஹமட் நசீம் மொஹமட் பைசால் என்பவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் தனூஜா ஜயதுங்க உத்தரவிட்டுள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற கொலை சம்பவத்திற்கு உதவி வழங்கியமை தொடர்பில் குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் குறித்த நபர் பாதாள உலக உறுப்பினரான கஞ்சிப்பான இம்ரானின் நெருங்கி நபர் எனவும் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.