மின்னேரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மரதன்கடவல – திருக்கொண்டியாமடு வீதியில் இன்று இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.
மின்னேரியாவிலிருந்து பொலனறுவை நோக்கி பயணித்த டிப்பர் வண்டி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளின் பின்புறமாக மோதுண்டமையினாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
அதனையடுத்து படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 53 வயதுடைய வாழைச்சேனை பகுதியை சேர்ந்த என அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன், விபத்துடன் தொடர்புடைய டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.