கூட்டணி அமைப்பது சம்பந்தமான பேச்சுவார்த்தை ஆரம்பம்

263 0

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. 

பேச்சுவார்த்தைக்காக இருதரப்பின் பிரதிநிதிகளும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்ததாக அத தெரண செய்தியாளர் கூறினார். 

இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடி வருகின்றனர்.