தோட்டத்தில் கஞ்சா வளர்த்த காவலாளி கைது

274 0

புத்தளம் சிராம்பியடி, பெரிஷ்டர்புர பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்டக் காவலாளி ஒருவர் சந்தேகத்தின் பேரில் இன்று செவ்வாய்க்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் சிராம்பியடிப் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், சந்தேக நபர் தங்கியிருந்து பார்வையிடும் தென்னந் தோட்டத்தில் விஷேட சுற்றிவளைப்பை மேற்கொண்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள புத்தளம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.