அரசாங்கம் தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்தால் தேசத்துரோகம்- பிமல்

285 0

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தை அரசாங்கம் தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்தால் அது தேசத்துக்கு செய்யும் பாரிய துரோகமாகும் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்துடன் புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் நிலைப்பாடு தொடர்பில் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் பொது தொழில் முயற்சி, கண்டிய மரபுரிமை மற்றும் கண்டிய அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழிநுட்பம் மற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு  மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.