போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் இருவர் உட்பட மூவர் கைது

268 0

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் இருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

26 வயதுடைய நைஜீரியா நாட்டவர்கள் இருவரும் 40 வயதுடைய மொரட்டுவ பகுதியை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கல்கிஸ்ஸ, பேகரி சந்தியில் முச்சக்கரவண்டி வண்டி ஒன்றை சோதனையிட்ட போது 32 கிராம் 19 மில்லி கிராம் கொக்கேய்னுடன் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேக நபர்கள் இன்று (03) நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.