இரு வேறு விபத்துக்களில் இருவர் பலி

337 0

மன்னார் – யாழ்ப்பாணம் இளுப்பங்கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் முலங்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

இளுப்பங்கடவை பகுதியை சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இதேவேளை நீர்கொழும்பு, கொப்பரா சந்தியில் லொறி ஒன்றுடன் மோதி 65 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் லொறி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.