பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட ஏனையோரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

248 0

டுபாயில் கைதான பாடகர் அமல் பெரேராவின் மகன் மற்றும் ஏனையோரின் விளக்கமறியல் காலம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சாப்திக வெல்லப்பிலி தெரிவித்தார்.

பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸுடன் டுபாயில் கைதான பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது மகன் நதீமால் பெரேரா உள்ளிட்ட தரப்பினரின் விளக்கமறியல் காலம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள்  இன்று  டுபாய்  நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். 

இந்நிலையில் குறித்த  விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பாடகர் அமல் பெரோ சார்பிலான சட்ட உதவிகளை மேற்கொள்வதற்காக டுபாய் சென்று நேற்றிரவு நாடு திரும்பிய சட்டத்தரணி சாப்திக வெல்லப்பிலி தெரிவித்துள்ளார். 

அவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்த மேலும் சில அறிக்கைகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டியுள்ளதன் காரணமாக கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.