வழமைக்கு திரும்பியது கரையோர ரயில் சேவை

255 0

களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம்புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த கரையோர ரயில்  சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

தண்டவாளத்தின் சீர்திருத்த பணிகள் நேற்று இரவு நிறைவடைந்ததாக ரயில் சேவைகளின் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
நேற்று அதிகாலை காலியில் இருந்து பயணித்த ரயில் ஒன்று களுத்துறையில் தடம்புரண்டதால் கரையோர தொடரூந்து சேவை பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.