மருமகன் கீழே தள்ளியதில் மாமனார் உயிரிழப்பு

242 0

அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற முறுகலின் போது அவர்களை தடுப்பதற்கு முயற்சித்த வயோதிபரொருவர் தனது மருமகனால் தள்ளி விடப்பட்டு உயிரிழந்துள்ளார். 

நேற்று இரவு 9.40 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவன் மனைவிக்கிடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரரையும் சமாதானம் செய்வதற்காக மனைவியின் தந்தை முயற்சித்தபோது, மருமகனால் அவர் தள்ளிவிடப்பட்டுள்ளார். 

மருமகனால் தள்ளிவிடப்பட்ட குறித்த நபர் இதன் போது ஆடை சலவை செய்யும் இயந்திரத்தின் மீது மோதியதில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்துள்ள நபர் 64 வயதுடைய, அங்குணுகொலபெலஸ்ஸ ஆவாரியகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.