டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாளக் குழுவொன்றின் தலைவரான மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட 31 பேரையும் இந்த மாதம் 27ஆம் திகதி முதற் தடவையாக டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு டுபாய் பொலிஸார் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் 31 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அதில் 15 பேருக்கு மாத்திரம் பிணை வழங்கி அவர்களை இலங்கைக்கு நாடு கடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.