புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு பேர் கைது!

248 0

பாதுக்க – மதுலாவ, தொலவத்த பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில், தனியாருக்குச் சொந்தமான இடமொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு பேரை பொலிஸார் நேற்று (17) கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் 23 தொடக்கம் 61 வயதுடையவர்களென்று தெரிவித்த பொலிஸார், இவர்கள் பாதுக்க, ஹசலக, மீகொடை, பூகொட மற்றும் பனாகொட ஆகிய பிர​தேசங்களைச் சேர்ந்தவர்களென்றும் தெரிவித்தனர்.