இரத்தினபுரியில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்!

245 0

இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்தெல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

நேற்று (17) இரவு 10.25 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கல்கமுவ, கரன்கொட பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.