அனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது வரையில் 100 அரச வைத்தியசாலைகள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல் தொழில் நுட்பப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.
இதேபோல் நாட்டில் உள்ள ஏனைய அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.