கிங்ஸ்லி வீதியின் புதிய போக்குவரத்து திட்டம் இன்று முதல் அமுல்

235 0

காலை வேலையில் கொழும்பில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் நோர்ட்டன் பிளேஸ் கிங்ஸ்லி வீதியின் ஒரு வழிப்பாதை போக்குவரத்தின் நேரம் இன்று (18) முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

வார நாட்களில் கிங்ஸ்லி வீதியில் இருந்து கேரி வித்தியாலயம் வரையான பகுதியில் காலை 7.30 மணியில் இருந்து 8 மணி வரையில் ஒரு வழிப்பாதை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. 

கொழும்பில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று முதல் காலை 7 மணி முதல் 8 மணி வரையில் ஒரு வழிப்பாதை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை கிங்ஸ்லி ரீஜன் சந்தியில் இருந்து கேரி வித்தியாலயம் வரையில் பயணிக்கும் வாகனங்கள் மருதானை – பொரள்ளை வீதி திசையிலே கிங்ஸ்லி பிளேஸ் ஊடாக வேர்ட் பிளேஸ் திசையிலே பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.