ஊழல்வாதிகளே அரசியலமைப்பு பேரவையினை எதிர்க்கின்றனர்-நளிந்த ஜயதிஸ்ஸ

236 0

தேசிய நிதியினை முறைகேடாக பயன்படுத்தி அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்த ஊழல்வாதிகளே  இன்று அரசியலமைப்பு பேரவையினை விமர்சிக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

அத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்களின் விசாரணைகளின்  பிரகாரம் தாம் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாகமே எதிர்ப்பு கோசங்களை எழுப்புகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அரசியலமைப்பு பேரவைக்கு  எதிராக தற்போது முன்வைக்கப்படுகின்ற  விமர்சனங்கள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய பொழுதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.