துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் கைது !

280 0

தனமல்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தனமல்வி பொலிஸார் இன்று அதிகாலை மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். 

 கடந்த 10ஆம் திகதி மதியம் 12.20 மணியளவில் தனமல்வில பகுதியில் குறித்த சந்தேக நபர்கள் இரு மோட்டார் சைக்கிளில் சென்று  நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் .

குறித்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மூன்று துப்பாக்கிகள் மற்றும் இரு மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். 

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 25 வயதுடைய சகோதரர்கள் இருவரும், 27 வயதுடைய மற்றொரு நபரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேகநபர்கள் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.