54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை

281 0

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 54 மாணவர்களுக்கு ஒரு வாரகால வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்தார்.

பகிடிவதையிலீடுபட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தைச் சேர்ந்த 54 மாணவர்களுக்கே குறித்த வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் ஒரு வாரகாலம் குறித்த மாணவர்கள்  வகுப்புகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் மேலும் தெரிவித்தார்.