கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது

292 0

வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நேற்று சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த சந்தேக நபரிடம் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து கேரள கஞ்சா மற்றும் 4000 ஆயிரம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

அத்தோடு அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா, பணம் மற்றும் அவர் பிரயாணம் செய்த மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.