நாட்டிலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் செயற்பட்டுவரும் அறநெறிப் பாடசாலைகளின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கான விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் பொருளாதார வசதிகளற்ற அறநெறிப் பாடசாலைகளுக்காக 1200 சதுர அடி பரப்பில் கட்டடங்கள் மற்றும் சுகாதார வசதிகள் என்பன செய்து கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.