மஹிந்த தேசப்பிரிய இராஜினாமா செய்வது தீர்வல்ல- மஹிந்த ராஜபக்ஷ

291 0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விலகிச் சென்று பிரச்சினையைத் தீர்க்க முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால் தான் ஆணைக்குழுவின் தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்திருந்த கருத்துக் குறித்து இவரிடம் வினவியதற்கே இவ்வாறு கூறியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் அவர் நியமிக்கப்பட்டிருப்பது தேர்தலை நடாத்துவதற்கே ஆகும். அவர் இராஜினாமா செய்வதன் ஊடாக பிரச்சினை தீரப் போவதில்லை. புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வரையில் பழைய சட்டம் நடைமுறையில் இருக்கும்.

இதனால், பழைய முறைமைப்படி தேர்தலை நடாத்த வேண்டும். அவருக்கு அதற்கான அதிகாரம் உள்ளது எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். 

Leave a comment