கனடாவில் ‘எழுக தமிழ்’

533 0

எழுகை கொண்ட மக்களே வரலாற்றை படைப்பார்கள்

தாயகத்தில் மிகவும் எழுச்சியோடு இடம்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க ‘எழுக தமிழ்’ நிகழ்வைத் தொடர்ந்து; அந்நிகழ்விற்கு வலுச்சேர்க்கும் முகமாக கனடிய மண்ணில் நடைபெறவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘எழுக தமிழ்’ நிகழ்வில் கனடா வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் கலந்து தமது தாயக கடமையை ஆற்ற வாருங்கள் என அன்போடு அழைக்கின்றோம்.
canada-eluka-thamil

எழுக தமிழ் நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. எதிர்வரும் சனிக்கிழமை ஓக்டோபர் 1, 2016 அன்று அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் மாலை 5:00 மணிக்கு எழுச்சி கொண்ட கனடிய தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடைபெற இருப்பதால் இந்நிகழ்வில் அனைத்து தமிழ் மக்களும்; அனைத்து தமிழ் அமைப்புக்களும் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்குமாறு அன்போடு வேண்டிக் கொள்கின்றோம்.

கனடிய மண்ணில் உள்ள அனைத்து ஊர்ச்சங்கங்கள், பாடசாலைகள், பழைய மாணவர் சங்கங்கள், விளையாட்டு கழகங்கள் என அனைவரையும் உங்கள் பதாதைகளோடு எழுக தமிழ் நிகழ்வில் பங்கேற்று தாய் மண்ணிற்கு பெருமை சேர்க்குமாறும்; எழுக தமிழ் நிகழ்வில் உங்கள் சங்கத்தின் சார்பில் உரையாற்ற விரும்புபவர்கள் எங்களுடன் தொடர்பு கொண்டு முற்பதிவை மேற்கொள்ளுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

<iframe width=”600″ height=”350″ src=”https://www.youtube.com/embed/fDaqZRH8h6M” frameborder=”0″ allowfullscreen></iframe>

அடக்கப்படும் எங்கள் தாயக மக்களுக்கான வலிமையான குரலை கனடிய மண்ணில் இருந்து; ஒன்று பட்ட குரலாக ஒலிப்போம் வாருங்கள்.

எழுக தமிழ்!