ஹிட்லர் போல் செயல்பட விருப்பம் – பிலிப்பீன் ஜனாதிபதி

368 0

philippines-presidential-candidate-rodrigo-duterte-ap-1-640x480அடல்ப் ஹிட்லர் 30 லட்சம் யூதர்களை கொன்றதனைப் போல் தாம் பிலிப்பீன்சில் போதை வஸ்த்திற்கு அடிமையான 30 லட்சம் பேரை கொல்ல விரும்புவதாக பிலிப்பீன்சின் ஜனாதிபதி ரொட்ரிகோ டியூட்டேவி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தமது சொந்த ஊரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இந்த கருத்தினை வெளிப்படுத்தினார்.

போதைவஸ்திற்கு அடிமையாகிய நிலையில் பிலிப்பீன்சில் உள்ளவர்களை கடுமையான குற்றவாளிகளாக கருதவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிலிப்பீன்சின் அடுத்த தலைமுறையினரையும் இவர்களது நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கும் எனவும் பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.