சர்வதேச சமூகத்துடனான உறவுகள் வலுப்பெற வேண்டும் – மைத்திரி

341 0

625-500-560-350-160-300-053-800-900-160-90இலங்கை மற்றும் சர்வதேச சமூகத்துடனான உறவுகள் மேலும் வலுப்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை – சீன நட்புறவு சங்கத்தின் 35வது வருட பூர்த்தி தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

சீனா, இலங்கைக்காக முன்னிலையான நட்புறவு நாடு என்பதை எவரும் மறுக்க முடியாது.
சர்வதேச நாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுகளை ஒரு போதும் மறக்க முடியாது.
அதனை மேலும் வலுப்படுத்தி கொள்வதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.