இலங்கை, கொலம்பியாவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்

301 0

cairo7கொலம்பியாவை இலங்கை முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று சர்வதேச ஊடகம் ஒன்று அறிவுறுத்தியுள்ளது.

அரைநூற்றாண்டு காலமாக கொலம்பியாவில் யுத்தம் நடைபெற்று வந்தது.

எனினும் அது தற்போது நிறைவுறுத்தப்பட்டு, வெற்றிகரமான சமாதான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்களை கடந்துள்ள போதும், இன்னும் சமாதானம் ஏற்படுத்தப்படவில்லை.

யுத்தத்தை வெற்றிக் கொண்டதன் பின்னர், மகிந்த ராஜபக்ஸ சமாதானத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை கைவிட்டமையே இதற்கான காரணம்.

எனவே தற்போதுள்ள அரசாங்கம் கொலம்பியாவை முன்னுதாரணமாக கொண்டு, சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த ஊடகம் அறிவுறுத்தியுள்ளது.