மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்குமாறு சபாநாயகர் அறிவிப்பு

282 0

எதிர்க்கட்சித் தலைவராக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொள்ளும்படி சபாநாயகர் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளை எதிர்க் கட்சியின் பிரதான அமைப்பாளராக மஹிந்த அமரவீர செயற்படுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக் குழப்பத்தின் பின்னர் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால் எதிர்க்கட்சித் தலைவர் யாருக்கு என்ற இழுபறி நிலை தொடர்ந்துவந்தது.

பாராளுமன்ற அங்கீகாரமற்ற கட்சியொன்றின் உறுப்புரிமை கொண்ட மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி வகிக்கும் தகுதி இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கூறிவந்தது.

இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்பதை உறுதிப்படுத்தி, சில தினங்களுக்கு முன்னர் அக்கட்சி சபாநாயகரிடம் உறுதிப்படுத்தற் கடிதத்தினைக் கையளித்திருந்தது.

நிலையில் இன்றைய தினம் சபாநாயகரின் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment