பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கூடிய விரைவில் நியாயமான சம்பளத்துடன் தீர்வு!- வடிவேல் சுரேஸ்

249 0

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமாக கடந்த காலங்களில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றது அனைவரும் அறிந்த விடயம். இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஒர் இரு வாரங்களில் நியாயமான சம்பளத்துடன் தீர்வினை பெற்றுக் கொடுக்க உள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கைச்சாத்து தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தொரிவித்துள்ளார். 

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர், தற்போது சமூக வலைதளங்களில் முன்னுக்கு பின் முரணான பல்வேறு கருத்துக்களும் செய்திகளும் வெளியாகி வருகின்றது. இதை யாரும் நம்ப வேண்டாம். சம்பள உயர்வு ஒப்பந்ததில் கைச்சாத்து இடும் தொழிற்சங்கங்கள் அறிவிக்கும் அறிவிப்பே உத்தியோக பூர்வமானது. 

தற்போது பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க வெளிநாடு சென்றுள்ளார். ஒர் இரு நாட்களில் நாடு திரும்ப உள்ளார் அவர் வந்ததும். தொழில் அமைச்சு ஊடாக பெருந்தோட்ட கம்பனிகளுடன் உடனே பேச்வார்த்தைகள் ஆரம்பிக்கபட்டு வெகு விரைவில் தீர்வு காணப்படும். 

இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்கவும் பணிப்புறை வழங்கியுள்ளார். இதற்கு அமையவே இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகேவுடன் நாளாந்தம் பேசி அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றேன். 

இம்முறை நியாயமான சம்பளத்துடன் நிலுவை பணத்தையும் பெற்றுக் கொப்பதில் ஒப்பந்த்தில் கைசாத்து இடும் தொழிற்சங்கங்கள் உறுதியாக உள்ளனர். நானும் அவ்வாறே. பெருந்தோட்ட தொழிலாளர்களின் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர நாங்களும் பல்வேறு முயற்சிகளை செய்து தான் வருகின்றோம். 

ஆனால் சிலரின் அறிக்கைகளை பார்க்கும் போது நாங்கள் அக்கறை கொள்வதில்லை என்ற மாதிரி இருக்கின்றது. அப்படி அல்ல. எங்களுக்கும் மனசாட்சியும் பெருந்தோட்ட மக்களின் மேல் அக்கறையும் இருக்கின்றது. நாங்களும் அந்த பரம்பரையை சேர்ந்தவர்கள். எனவே, இந்த பிரச்சினைக்கு கூடிய விரைவில் முடிவு எடுப்போம் என்று கூறினார். 

Leave a comment