சபாநாயகர் முரண்பட்டால் எமது நடவடிக்கை ஆபத்தானது- திலங்க

306 0

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பெரும்பான்மை பலத்தை இந்த அரசாங்கத்துக்கு தராவிடின், இந்த சபாநாயகர் இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கும் வரையில் தீர்மானம் ஒன்றுக்கு வர முடியாது என முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

அரசாங்க தரப்புக்கு தெரிவுக் குழுவில் பெரும்பான்மைப் பலத்தை வழங்குவது பாராளுமன்ற சம்பிரதாயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment