மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்பு

281 0

வென்னப்புவ, சிறிகம்பொல பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்படுகின்றனர்.

இன்று (22) பகல் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறிகம்பொல பகுதியை சேர்ந்த மேரி லினட் என்ற 79 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித் பெண் ஒன்று காலை முதல் வீட்டில் எல்லாத காரணத்தால் அவருடைய பிள்ளைகள் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் சடலத்தை அடையாளம் கண்ட பிரதேசவாசி ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment