ஒரு தொகை ஹெரோயின் மற்றும் பணத்துடன் நபர் ஒருவர் கைது

286 0

கெஸ்பேவ பகுதியில் ஒரு தொகை ஹெரோயின் மற்றும் பணத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

சந்தேக நபரிடம் இருந்து 1.010 கிலோ கிராம் நிறையுடைய 12.1 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சுமார் 6.2 மில்லியன் பணமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment