இடமாற்றியமைக்கும் ஜனாதிபதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை:மஹிந்த சமரசிங்க

285 0

பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவை சி.ஐ.டி.யில் இருந்து இடமாற்றிய விவகாரத்துக்கும் ஜனாதிபதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் சர்வதேசத்துடன் இணைந்து ஜனாதிபதி மீது சேறுபூசும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சரவை பேச்சாளரான  மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறிஜய சேகர ஆகியோர் தெரிவித்தனர்.

இதேவேளை பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவின் இடமாற்றத்தில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர முறையற்ற விதமாக நடந்திருந்தால் அவருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் குறிப்பிட்டனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

Leave a comment