பிரதமர் பதவி தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது – சட்ட மா அதிபர்

206 0

பிரதமர் பதவி தொடர்பில் தான் கருத்து வெளியிடுவது சிறந்தது அல்ல என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி மற்றும் அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் சட்டபூர்வ தன்மை தொடர்பில் அரசியலமைப்பின் கீழ் சட்டமா அதிபரின் வரையறைக்கமைய கருத்து வௌியிடுவது சிறந்தது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயத்தினை கடிதம் ஒன்றின் மூலம் அவர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

பிரதமர் மாற்றம் தொடர்பில் கடந்த 27ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரியமைக்கு அமைவாகவே அவர் இந்தப் பதிலை வழங்கியுள்ளார்.

Leave a comment