அமைச்சர் சரத் பொன்சேகாவை,மஹிந்த ராஜபக்ச தரப்பினர் “நாட்டாமி” என்றனர்

415 0

sarath-fonseka-1நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் நடத்தைகள் தொடர்பில் வரைவு ஒன்றுசமர்ப்பிக்கப்பட்டு ஆறு மாதங்களாகியும் இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை.

இந்தநிலையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்துக்கு புறம்பான செயல்களில்ஈடுபட்டு வருகின்றனர்.இதனையடுத்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய எச்சரித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அமைச்சர் சரத் பொன்சேகாவை,மஹிந்த ராஜபக்ச தரப்பினர் “நாட்டாமி”( மூடை சுமப்பவன்) என்று கோசித்தனர்.

இதன்போது பிரயோகிக்கப்பட்ட அசிங்கமான வார்த்தைகளை அடுத்து சபைக்கு தலைமை தாங்கியபிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, அடுத்த பேச்சாளரை உரையாற்றுமாறு அழைப்புவிடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.