புலத்திலும் நிலத்திலும் வலுப்பெறும் மக்கள் போராட்டம்

475 0

தமிழின அழிப்புக்கு நீதி கோரி 9 வது நாளாக சுவிஸ் நகரங்களை ஊடறுத்து ஐநா மன்றத்தை ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை நோக்கி ஈருருளிப்பயணம் தொடர்கின்றது. மாவீரர்களின் தியாகத்தை நினைவில் பதித்து விடுதலையே எமது வேணவாவென வலிகளை சுமந்தவண்ணம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப்பயணம் தொடர்ந்து பயணிக்கின்றது. ஈருருளிப்பயணம் செல்லும் நகரங்களில் தமிழ் உறவுகள் தம்மாலான ஆதரவை வழங்கி வருகின்றனர்.நேற்றைய தினம் முடேன்ஸ் எனும் நகரத்தில் இடைநிறைவடைந்துள்ளது.இப் பயணத்தில் சுவிஸ் நாட்டிலிருந்தும் ஈழத்தமிழ் உறவு ஒருவர் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

img_0281

தியாக தீபம் திலீபனின் நினைவு நாட்களில் தாயகத்தில் 24.09.2016 அன்றும் புலத்தில் ஜெனிவாவில் 26.09.2016 அன்றும் மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களும் உணர்வோடு கலந்துகொள்வது வரலாற்றுக்கு கடமையாகும் . பின்வரும் கோரிக்கைகளோடு எதிர்வரும் 26.09.2016 அன்று ஐநா மனிதவுரிமை ஆணையாளர் காரியாலயத்தோடு சந்திப்பு ஒன்றும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி நிரந்தர தீர்வு தமிழீழம்

1. பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்;கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

img_0282

img_0280