ஸ்மார்ட்போனால் காப்பற்றப்பட்ட உயிர்

407 0

phone3ஸ்மார்ட்போன் கையடக்கத் தொலைபேசியால் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

இவ்வளவு காலமும் திரைப்படங்களில் மட்டுமே இந்த விடயங்களை கண்டுகளித்த பலர் இதை நிஜத்திலும் கண்டுள்ளனர்.

தென் அமெரிக்காவின் கேப் டவுன் நகரிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

5 பிள்ளைகளின் தந்தையான சிராஜ் அப்ராமிஸ் என்பவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கேப் டவுனில் வைத்து இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது இவரது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிச் சூடு பதிந்துள்ளது.

எனினும் இவர் அணிந்திருந்த ஜெக்கட்டின் பொக்கட்டில் இருந்த ஸ்மார்ட் போன் மீதே துப்பாக்கிச் சூடு பட்டுள்ளதால் இவரது உயிருக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த கையடக்கத் தொலைபேசி சுக்குநுறாகிப் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

phone