தனக்கு பயமில்லை-அமைச்சர் தயாசிறி

349 0

dayaரியோ ஒலிம்பிக்கிற்காக விளையாட்டுத்துறை அமைச்சின் தலையீட்டில் 40 பேர் அடங்கிய குழு ரியோவிற்கு சென்றதாக கூறும் தகவல்களில் உண்மையில்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி செலவில் 28 பேர் மாத்திரமே ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் குழு தொடர்பில் தான் பயப்படப் போவதில்லை.

ஒலிம்பிக் குழு தவறு செய்தால் அமைச்சருக்கு உள்ள அதிகாரம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சாசனத்தின் நிலைமைக்கு அமைய எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் தன்னால் எடுக்கமுடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.