கிளின்டன் பூகோள முனைப்பு அமையத்தின் கூட்டத்தில் சிறீலங்கா அதிபர்

277 0

maithri-usa-1ஐநாவின் 71ஆவது பொதுச்சபைக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியுயோர்க் புறப்பட்ட சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் கிளின்டன் பூகோள முனைப்பு அமையத்தின் வருடாந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நியுயோர்க்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 12 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் இத்தாலி, சுவீடன் தலைவர்கள் உட்பட சிறீலங்கா அதிபரும் உரையாற்றினார்.