மன்னார் பள்ளிமுனைக் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது – பாதுகாப்பு அமைச்சு

353 0

ministry-of-defence-pic-pa-278030492பள்ளிமுனைப் பிரதேசம் தமிழக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கேந்திர மையமாக அமைந்துள்ளதால் அக்காணிகளை மக்களிடம் கையளிக்கமுடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

இலங்கைக்கு போதைப்பொருள் தருவிக்கும் முக்கிய கேந்திர நிலையங்களுள் பள்ளிமுனையும் ஒன்றாகக் காணப்படுகின்றது.

பள்ளிமுனைப் பிரதேசத்தில் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் மக்களின் காணிகளை விடுவிக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

பள்ளிமுனைப் பிரதேசம் தமிழக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் முக்கிய கேந்திரமையம் என கடற்படையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

எனவே இந்தப்பிரதேசத்தில் கடற்படை முகாம் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே குறித்த காணிகளை விடுவிக்கமுடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.